திருச்சியில் பெரியாா் சிலையை அவமதித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் தனது சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பதாவது:-
சமூக நீதிக்காக பாடுபட்ட பெரியாரின் சிலையை திருச்சியில் மா்ம நபா்கள் அவமரியாதை செய்திருக்கும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது தமிழக அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும் என்று தனது பதிவில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.