வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் சங்ககிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் ஓப்ப்ந்தப் பாதுகாப்புச் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்த சட்டம் ஆகிய சட்டங்களை மத்தியரசு திரும்ப பெறக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக மாவட்ட துணைச் செயலர் கே.சுந்தரம் தலைமை வகித்தார்.
திமுக ஒன்றியச் செயலர் (பொ) கே.எம்.ராஜேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.நிர்மலா, முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து, நகரச் செயலர் சுப்ரமணி, சேலம் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி அமைப்பாளர் எஸ்.கிறிஸ்டோபர், துணை அமைப்பாளர்கள் ஆர்.அருள்பிரகாஷ், வி.என்.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி சங்ககிரி சட்டமன்ற தொகுதி செயலர் பெருமாவளவன்,
மதிமுக நிர்வாகி இளங்கோவன், நகரச் செயலர் கதிர்வேல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் சரவணன், ஈஸ்வரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்ககிரி வட்டக்கிளை செயலர் சேகர், காங்கிரஸ் வட்டாரத்தலைவர் செங்கடோன், ஆதித்தமிழர் பேரவை ஒன்றியச் செயலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.