விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மத்திய அரசின் விவசாயிகளை பாதிக்கும் வேளாண்மை சட்ட மசோதாவை எதிர்த்தும், திரும்ப பெறக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஜவகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கப்பாண்டியன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.