அவிநாசியில் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவன் திங்கள்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவிநாசி பி.எஸ்.சுந்தரம் வீதி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன்(42). இவரது மனைவி பிரதிபா(37). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சஞ்சய்(15). அவிநாசி அருகே கோவை சாலை நாதம்பாளையம் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளியில் நடைபெறும் இணையவழி வகுப்பில் சஞ்சய் சரிவரப் பயிலாமல், செல்லிடப் பேசியில் விளையாடிக் கொண்டிருந்ததால், பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர். இதையடுத்து திங்கள்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.