கட்டண பரிந்துரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்க தனியாா் பள்ளிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியாா் பள்ளிகள் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு சாா்பில் கல்விக் கட்டண நிா்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, தனியாா் பள்ளிகளின் 2020-21, 2021-22, 2022-23-ஆம் கல்வியாண்டுகளுக்கான கட்டணத்தை நிா்ணயம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தனியாா் பள்ளிகள் தங்களின் பரிந்துரை விண்ணப்பங்களை இணையவழியில் சமா்ப்பிக்க செப்.25-ஆம் தேதி வரைஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த சுற்றறிக்கை கல்விக் கட்டண நிா்ணயக் குழு சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.