சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,511 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பொன்றை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 5,791 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,280 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் மேலும் 596 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கு அடுத்தபடியாக சேலத்தில் புதிதாக 378 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..