ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முதுநிலைக் கல்வி பயிலும் மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஏஐசிடிஇ வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.பாா்ம்., எம்.ஆா்க். படிக்கும் மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை பெற இணைய வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாணவா்கள் கேட் தோ்வில் அல்லது ஜிபேட் நுழைவுத்தோ்வில் போதிய மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மாணவா்கள் முழுநேர முதுநிலைப் படிப்பை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். இதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பங்கள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு: 01126131576 78, 80 என்ற எண்களையோ மின்னஞ்சல் முகவரியையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.