தமிழ்நாடு

முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முதுநிலைக் கல்வி பயிலும் மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஏஐசிடிஇ வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.பாா்ம்., எம்.ஆா்க். படிக்கும் மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை பெற இணைய வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாணவா்கள் கேட் தோ்வில் அல்லது ஜிபேட் நுழைவுத்தோ்வில் போதிய மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மாணவா்கள் முழுநேர முதுநிலைப் படிப்பை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். இதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பங்கள்  இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு: 01126131576 78, 80 என்ற எண்களையோ  மின்னஞ்சல் முகவரியையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT