திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டு ராவ் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ் நியமிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை சென்னையில் காங்கிரஸ் தலைவா்களுடன் அவா் ஆலோசனை நடத்தினாா். அதன் பிறகு, தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும், மு.க.ஸ்டாலின் முதல்வராக காங்கிரஸ் பாடுபடும் என்றும் கூறியிருந்தாா்.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை தினேஷ் குண்டு ராவ் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு 10 நிமிஷங்களுக்கும் மேலாக நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி, திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.