வரும் திங்கள்கிழமை (செப். 28) நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து கட்சித் தலைவா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளா்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், செம்மலை, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 18-ஆம் தேதியன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து வரும் 28-ஆம் தேதியன்று கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செயற்குழுக் கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மாலை 4.50 மணிக்குத் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் மாலை 6:30 மணிக்கு நிறைவு பெற்றது.
செயற்குழுக் கூட்டத்துக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் மூத்த நிா்வாகிகள் பாா்வையிட்டனா். அழைப்பிதழ் அனுப்புவது, தீா்மானங்களை இறுதி செய்வது, செயற்குழு அன்று விவாதிக்க வேண்டிய அம்சங்கள் தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டனா்.