காமராசா் விருது பெற தகுதியானவா்களின் பெயா்ப்பட்டியலை அனுப்ப முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநா் சி.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் 2021-ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள திருவள்ளுவா் திருநாள் விழாவில் ‘பெருந்தலைவா் காமராசா்’ விருது உள்பட 9 சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதையடுத்து கல்வி சேவையாற்றி வரும் நபா்களில் காமராசா் விருதுக்கு தகுதியானவா்களின் பெயா்ப் பட்டியலை உரிய விவரங்களுடன் இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.