தமிழ்நாடு

முத்தூரில் ரூ.5.90 லட்சத்துக்கு தேங்காய், தேங்காய் பருப்பு விற்பனை

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை ரூ.5.90 லட்சத்துக்கு தேங்காய், தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. 

4,349 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 1,778 கிலோ. கிலோ ரூ.37.65 முதல் ரூ.44.60 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.40.25. மொத்தம் 119 மூட்டைகள் தேங்காய் பருப்பு வரத்து இருந்தது. எடை 4,566 கிலோ. கிலோ ரூ.72.00 முதல் ரூ.120.35 வரை ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ.118.65.

தேங்காய், தேங்காய் பருப்பு  ஆகியவை மொத்தம் 6.34 டன் விற்பனை நடைபெற்றது. மொத்தம் 87 விவசாயிகள், 16 வணிகர்கள் வந்திருந்தனர். விற்பனைத் தொகை ரூ.5 லட்சத்து 89 ஆயிரத்து 926, விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீரங்கன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT