திருச்சி: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள வழிவிடு முருகன் கோவில் அருகே எஸ்.பி.பி. உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.
திருச்சி மாவட்ட இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், மேடை இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பலரும் கலந்து கொண்டு எஸ்.பி.பி-யின் உருவப்படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.