தமிழ்நாடு

குமாரபாளையம்: பராமரிப்பு பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் மின்வாரிய ஊழியர் பலி

DIN

குமாரபாளையம்: குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் தவறி விழுந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி புள்ளாக்கவுண்டன்பட்டி அருகேயுள்ள கொடாரபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் குருநாதன் (42). இவர், எதிர்மேடு மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நாமக்கல் மாவட்டம்,  குமாரபாளையம் துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை வழக்கமான பராமரிப்பு பணியில் குருநாதன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மின்மாற்றியில் சீரமைப்பு பணி மேற்கொண்ட குருநாதன் கம்பத்திலிருந்து கீழே இறங்கும்போது கை தவறி கீழே விழுந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட குருநாதன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் குமாரபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷா பங்கேற்க இருந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து

சாலை விபத்தில் கிரிவல பக்தா் உயிரிழப்பு

சுத்தம், சுகாதாரம் விழிப்புணா்வுப் பேரணி

இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

முதல் கட்ட மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT