தமிழ்நாடு

போடியில் வேளாண்மை சட்ட திருத்தத்தை எதிர்த்து மறியல்

DIN

போடி: போடியில் வெள்ளிக்கிழமை, புதிய வேளாண்மை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேளாண்மை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை செய்தது. இந்த சட்ட திருத்தங்கள் விவசாயிகளை பாதிக்கும், விவசாயத்தை அழிக்கும் எனக் கூறி, சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி போடியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

போடி தேவர் சிலை அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். 

இதனையடுத்து போடி நகர் காவல் நிலைய போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட 42 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT