கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து காட்டேரி ஊராட்சி அனுமந்தீர்த்தம் கிராமத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்து முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். காட்டேரி அரசு மருத்துவமனை மருத்துவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார், முன்னதாக மருந்தாளுநர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.
இதில், காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினரும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.