சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 9,938 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை ஒட்டுமொத்தமாக சென்னையில் கரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,59,683 ஆக உள்ளது. இதில் 1,46,634 பேர் குணமடைந்துவிட்டனர். 3,111 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பாதித்தவர்களில் 60 சதவீதம் பேர் ஆண்கள், 40 சதவீதம் பேர் பெண்கள். ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவரகளில் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் விகிதம் வெறும் 6 சதவீதம் மட்டுமே.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரில் அதிகபட்சமாக அண்ணாநகரில் 1,144 பேரும், கோடம்பாக்கத்தில் 1,141 பேரும் உள்ளனர். குறைந்தபட்சமாக மணலியில் 210 பேரும், சோழிங்கநல்லூரில் 284 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.