தமிழ்நாடு

மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்

DIN

மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்கடி கரோனா தொற்று காரணமாக கடந்த 11-ம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 

'மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடியின் அகால மறைவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT