தமிழ்நாடு

மருத்துவக் குழுவுடன் வரும் 29-ல் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி

DIN

சென்னை: பொதுமுடக்கம் நீட்டிப்பு,  தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, தளர்வுகளுடன் கூடி நான்காம் கட்ட பொது முடக்கம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்

தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களையும், மருத்துவக் குழுவினரையும் சந்தித்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

பொது முடக்கத்தை நீடிப்பது, மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, வரும் 29-ம் தேதி காலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தும் முதல்வர் பழனிசாமி, பிறகு மருத்துவக் குழுவினரை சந்திக்க உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT