தமிழ்நாடு

எஸ்.பி.பி. உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

DIN

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். 

கரொனா தொற்று கடுமையாக நுரையீரலை தாக்கி செயலிழக்கும் நிலைக்கு சென்றதால் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதியிலிருந்து செயற்கை சுவாசமும், எக்மோ சிகிச்சையும் கொடுக்கப்பட்டு வந்தது.

இதனிடையே அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இதனை அவரது மகன் எஸ்.பி.பி.சரணும் விடியோ வாயிலாக உறுதிப்படுத்தினார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது, அவர் விரைவில் வீடு திரும்ப விரும்புவதாக நேற்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் எக்மோ கருவி மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறது.

கடந்த சில நாள்களாக எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகியுள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT