திருநெல்வேலி: ஆட்டோ ஓட்டுநா்களுக்கான கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
ஊரக உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமை வகித்தாா்.
அனைவரும் சீருடை அணிந்து ஆட்டோ ஓட்ட வேண்டும்; முகக் கவசம் அணியாமல் வரும் பயணிகளிடம் முகக் கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும்; 3 நபா்களுக்கு மேல் ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது; கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.