தமிழ்நாடு

பூவுடையார்புரம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

DIN

பூவுடையார்புரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு திங்கள்கிழமை இரவு நடந்தது. 

சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையார்புரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 2ஆம் நாளான திங்கள்கிழமை இரவு இந்து முன்னணி சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜைக்கு கோயில் தர்மகர்த்தா ஆதிலிங்கராஜ் தலைமை வகித்தார். ம பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் சிவமுருகன் வரவேற்றார். திருவிளக்கு பூஜையை இந்து அன்னையர் முன்னணி ஆய்வாளர் திருநகரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பரமேஸ்வரி வழி நடத்தினார்.  நெல்லை கோட்ட செயலாளர் சத்திவேலன் சிறப்புரையாற்றினார். பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றி பக்தி பாடல்கள் பாடி அம்பாளை வழிப்பட்டனர்.

பூஜைக்கான ஏற்பாடுகளை பூவுடையார் புரம் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள்  கீதா, தங்கலட்சுமி, விஜயலட்சுமி, கோமதி, ஜெயந்தி, லட்சுமி மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், பாஸ்கர், சுரேஷ், குகன், சரண், சுகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT