தமிழ்நாடு

கனிம வளங்கள் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்யக் கோரி மனு

DIN

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை ஏலம் எடுப்பது தொடா்பான அறிவிப்பை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்.பி., தாமரைச்செல்வன் தாக்கல் செய்த மனுவில், தருமபுரி மாவட்டத்தில் தாமிரம், இரும்பு, கருப்பு கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கடந்த ஜூன் 3 -ஆம் தேதி பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலங்களில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டாா். அந்த அறிவிப்பில் ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி செப்டம்பா் 28 என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருப்பு கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும். அதன் பின்னா்தான் மாநில அரசு கருப்பு கிரானைட் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட வேண்டும் என விதிகள் உள்ளன. ஆனால், தமிழக அரசு இந்த விதிகளைப் பின்பற்றாமல் ஏலத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இந்த ஏலத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

விதிகளை முறையாகப் பின்பற்றி புதிதாக ஏல அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

SCROLL FOR NEXT