தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத 2 பேர் பலி

DIN

திருவள்ளூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் உடல் நலக்குறைவால் 2 அடையாளம் தெரியாதோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே வரதராஜபுரம் ரயில்வே இருப்பு பாதையோரம் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நகர் காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

அதேபோல், மணவாளநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன் பேரில் மணவாளநகர் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். 

இந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இவர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT