தமிழ்நாடு

நாமக்கல் ஆஞ்சனேயர், நரசிம்மர் கோயிலில் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் வழிபாடு

DIN

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவர், அங்குள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர், நரசிம்மர் கோயிலில் வழிபாடு செய்தார்.

வேளாண் மசோதா தாக்கல், புதிய கல்விக் கொள்கை போன்ற பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளிட்டு வருகிறது. இவருக்கு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் திராவிட சதியை முறியடிப்போம் என்ற தலைப்பில் நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் பாஜக ஆதரவு பெற்ற தமிழ் நாடு ஏகத்துவ ஜமாஅத் அமைப்பின் மாநிலத் தலைவர் எம்.இப்ராஹிம் தலைமை வகித்தார். பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஜமாஅத் அமைப்பின் மாநிலத் தலைவர் இப்ராஹிம் நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் வரவேற்பளித்தனர். 

இங்குள்ள நாமகிரி தாயார் சன்னதி, லட்சுமி நாராயண சுவாமி கோயில் ஆகியவற்றுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் ஆஞ்சனேயர் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் பாஜக மாவட்டத் தலைவர் என். சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT