புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 493 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் நேற்று 5580 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 493 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை 23 ஆயிரத்து 684 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 18,454 பேர் குணமடைந்துள்ளனர். 473 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு சதவீதம் 2 தொடர்கிறது.
தற்போது 4757 பேர் சிகிச்சைகள் உள்ளனர். தினசரி பரிசோதனை அளவை இரு மடங்கு அதிகரித்துள்ளனர்.