திமுக முன்னாள் அமைச்சரும், முதன்மைச் செயலருமான கே.என்.நேருவின் தம்பி, கே.என். ராமஜெயத்தின் 59ஆவது பிறந்தநாள் விழா திருச்சியில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சி-மணப்பாறை சாலையில் உள்ள கேர் கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் அமைந்துள்ள கே.என். ராமஜெயத்தின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்எல்ஏ-க்கள் செளந்தரபாண்டியன், மூர்த்தி, ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலர் தியாகராஜன், மாநகரச் செயலர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்பட அக் கட்சியினர் பலரும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கேர் கல்லூரிக்கு வந்து கே.என். ராமஜெயத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், சிலையின் பீடத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த கே.என்.ராமஜெயத்தின் உருவப்படத்துக்கும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.