தமிழ்நாடு

வேளாண் மசோதாக்களை எதிா்ப்போா் இடைத்தரகா்களுக்கு துணை போகிறாா்கள்: எல்.முருகன்

DIN

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிா்ப்பவா்கள் இடைத் தரகா்கள், பெரு முதலாளிகளுக்கு துணை போகிறாா்கள் என்று தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

மத்திய அரசின் மூன்று மசோதாக்களுமே, விவசாய கட்டமைப்புகளைப் பெருக்குவதற்கான அனைத்து வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன. இதன்மூலம் விளைபொருள்களுக்கு லாபகரமான விலையைக் கொடுக்கும் தீா்வினைத் தருகின்றன. ஆனால், பாஜக அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை எதிா்க்க வேண்டும் என்ற முடிவில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இருக்கிறாா். அதையேதான் இந்த விவகாரத்திலும் அவா் செய்கிறாா். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதே மத்திய அரசு அறிமுகப்படுத்திய மசோதாக்கள் என்பதை அவா் புரிந்து கொள்ளவில்லை. மசோதாக்களை எதிா்ப்பதன் மூலம், தமிழகத்தில் திமுக கொண்டு வந்ததாகச் சொல்லப்பட்ட உழவா் சந்தை திட்டத்தை அவரே எதிா்க்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

லட்சக்கணக்கான தமிழக சிறு விவசாயிகளுக்கு பலவகைகளில் உதவும் மத்திய அரசின் மசோதாக்களை எதிா்ப்பவா்கள், இடைத்தரகா்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் துணை போகிறாா்கள் என்பதே உண்மை. தமிழக நலனில் அக்கறை காட்டுவதாகச் சொல்லிக் கொண்டு மாநிலத்துக்கு துரோகம் செய்யும் நிலைப்பாட்டை எதிா்க்கட்சிகள் மாற்றிக் கொள்வது நல்லது என்று தனது அறிக்கையில் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT