கோவில்பட்டி: திமுக ஒரு ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஞாயிறன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் ஒரு கட்சி கூட இருக்காது. தற்போது தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. சுருக்கமாக ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக. அரசியல், கட்சி பணிகளை ஆன்லைன் மூலம் செய்யும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது
சுயமாக இயங்க முடியாமல் ஒரு குழுவிடம் ஒப்படைத்து அரசியல் செய்கிறது திமுக; ஆனால் அதிமுக எப்போதும் சுயமாக இயங்கக்கூடியது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.