சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 4,520 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பொன்றை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 5,516 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 5,41,993 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 996 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 568 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற ஒவ்வொரு மாவட்டங்களில் 300-க்கும் குறைவாகவே கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
மாவட்டவாரியாக: இங்கே க்ளிக் செய்யவும்..