தமிழ்நாடு

புரட்டாசி சனிக்கிழமை: தங்கக் காப்பு அலங்காரத்தில் போடி ஸ்ரீநிவாசபெருமாள்

DIN

போடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு தங்க காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றதால் பக்தர்கள் கரோனா அச்சத்தையும் மீறிக் கூடினர்.

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். இந்த நாள்களில் பூஜை செய்தால் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனை முன்னிட்டு போடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.

பெருமாளுக்கு மஞ்சள், பால், இளநீர், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்கக் காப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் இறைவனை வழங்கினர். பூஜை ஏற்பாடுகளை கோவில் தலைமை அர்ச்சகர் சீனிவாச வரதன் என்ற கார்த்திக் மற்றும் கட்டளைதாரர்கள் செய்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் சிறப்புப் பூஜை நடைபெற்றதால் கரோனா அச்சத்தையும் மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.

போடி ஜக்கமநாயக்கன்பட்டி போஸ்பஜார் அருள்மிகு ஸ்ரீராமர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தலைவர் முருகன், செயலாளர் ஓண்டீஸ்வரன், பொருளாளர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.  

போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராயசுவாமி ஒன்னம்மாள் திருக்கோவில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயசுவாமி ஒன்னம்மாள் திருக்கோவில், போடி-ரெங்கநாதபுரம் ஸ்ரீரெங்கநாதர் திருக்கோவில், தேவாரம் ஸ்ரீரெங்கநாதசுவாமி திருக்கோவில் ஆகிய கோவில்களிலும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதேபோல் போடி வினோபாஜி காலணி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சங்கரநாராயணர் கோவிலில் சுவாமிக்கு திருப்பதி அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூஜை செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT