சங்ககிரி: நாம் தமிழர் கட்சியில் சார்பில் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்டம், சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி இளைஞர் பாசறை செயலர் ரா.ராகுல்பாண்டியன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். சங்ககிரி ஒன்றிய செயலர் ஏ.சீனிவாசன் முன்னிலை வகித்தார். மகளிர் பாசறை செயலர் எஸ்.பெர்சியா, சங்ககிரி, தாரமங்கலம், மகுடஞ்சாவடி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
நீட் தேர்வினால் ஏழை மாணவர்களின் மருத்துவராக முடியாத நிலை ஏற்பட்டு வருகின்றன. பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவே மத்தியரசு நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்பன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.