தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளை வரும் 21ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அண்மையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் 3,501 நகரும் நியாய விலை கடைகளை முதல்வர் பழனிசாமி 21ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.