தமிழ்நாடு

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

DIN

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தேதிக் குறிப்பிடாமல்  பேரவைத் தலைவர் தனபால் ஒத்தி வைத்தார். 
கரோனா இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் செப்டம்பர் 14-ஆம் தேதி கூடியது.
முதல் நாள்  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன், மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2 நாள் அவை நடவடிக்கைகளில் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு உள்பட  24 சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில் இறுதிநாளான புதன்கிழமை பேரவையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியது.  அதைத் தொடர்ந்து அவையை பேரவைத் தலைவர் தனபால் ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT