சென்னை: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்லூரிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் கூடுதலாக 20% மாணவர்கள் சேர்க்கைக்கு கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதியளித்துள்ளது.
மேலும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.