தமிழ்நாடு

சென்னையில் தண்ணீர் டேங்கர் லாரி மோதி 4 வயது சிறுவன் பலி

DIN


சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் அருகே தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பட்டினம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை காலை சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது, கட்டுப்பாடின்றி வந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதியது. இதில், தனது தாத்தாவுடன் சென்றுகொண்டிருந்த தரமணியைச் சேர்ந்த பிரணீஷ் என்ற 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 3 பேர் காயமடைந்தனர். சிக்னல் கம்பங்கள், வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 

சிறுவன் உயிரிழந்ததை அறிந்த லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

விபத்து ஏற்படுத்திய லாரியை கைப்பற்றிய போக்குவரத்து காவலர்கள் தப்பிச் சென்ற ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT