திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
செப். 5 ஆசிரியர் தினத்தையொட்டி, மாநில அரசு வருடந்தோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 2020ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கு, வெள்ளக்கோவில் துரைராமசாமி நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ப.புவனேஸ்வரி, முத்தூர் சக்கரைபாளையம் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ந.மல்லிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.