இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி மகிழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபபாய் படேலின் 145ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சுட்டுரையில், “புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபபாய் படேல் அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
சர்தார் வல்லபபாய் படேலில் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.