தமிழ்நாடு

புதுவையில் 3-வது நாளாக கரோனாவுக்கு ஒருவரும் பலியாகவில்லை

PTI

புதுச்சேரியில் கடந்த வாரத்தில் மூன்றாவது நாளாக ஒருவரும் பலியாகவில்லை என்று யூனியன் பிரதேச சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வாரத்தில் மூன்றாவது நாளாக புதுச்சேரியில் கரோனா நோயாளிகள் யாரும் பலியாகவில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே அக்டோபர் 18-ம் தேதி முதல் முறையாக கரோனாவுக்கு யாரும் பலியாகாத நிலையில், அக்.26 மற்றும் 27-யிலும் கரோனாவுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, புதுச்சேரியில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில் புதிதாக 149 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 34,908 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 3,739 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 30,577 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT