தமிழ்நாடு

தமிழகத்தை வன்முறை காடாக்க பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

DIN

புதுச்சேரி: தமிழகத்தை வன்முறை காடாக்க பாஜக முயற்சி செய்கிறது என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்களை வழங்க கோரி புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்குப்பின் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு தொடுத்த வழக்கில், மருத்துவ கல்லூரியில் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்கள் வழங்க வேண்டும்.  இது குறித்து 3 மாத காலத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.  இதனை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை. இதைத் தொடர்ந்து, இந்தாண்டே 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசு ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், மத்திய அரசு இதுகுறித்து எந்த கொள்கை முடிவும் இதுவரை எடுக்கவில்லை. எனவே, 50 சதவீத இடஒதுக்கீடு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் ஏற்கனவே நடைமுறையில்உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை கோரினாலும் தர முடியாது என கூறியுள்ளது.

அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.   இதற்கு முழு பொறுப்பு மோடி அரசுதான்.  ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்களும் இந்துக்களே. அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்தாண்டு மருத்துவப்படிப்பில் 500 பேருக்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கு7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார். இது மத்தியலிருந்து ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் என்று தெரிகிறது.

பாஜகவின் மாநில கல்வி பிரிவு செயலாளர் ஆளுநர் கையொப்பமிட்டால் அதனை கடுமையாக எதிர்ப்போம் என்கிறார். மக்களிடம் ஒரு முகம், நிர்வாகத்தில் மற்றொரு முகத்தை காட்டி இரட்டைவேடம் போடும் கட்சி பாஜக என்பது தொடர்ந்து நிரூபணமாகியுள்ளது.

பெண்களுக்காக வக்காலத்து வாங்கும் பாஜக,  பெண்களை துன்புறுத்தும் ஒருவரை மதுரை எய்ம்ஸ் உறுப்பினாக நியமித்திருப்பது வெட்க கேடனாது.  அந்த நியமன ஆணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.

கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக நடத்திய போராட்டங்கள் இந்து மதத்தை புண்படுத்திவிட்டார்கள் என்று எனக்கு எதிராக மட்டுமல்ல,  நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.  ஆனால், யாருடைய உரிமைக்காவும், இடஒதுக்கீட்டுக்கும், பெண்களின் நலனுக்காகவும் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தவில்லை.

எச்.ராஜா போன்றவர்கள் டிவிட்டர் பக்கத்தில் அநாகரீகமாக விமர்சனங்களை செய்யக் கூடிய அளவுக்கு தமிழகம் அவர்களை அனுமதித்து கொண்டிருக்கிறது.  அவர்கள் தமிழகத்தை வன்முறை காடாக்க முயற்சிக்கிறார்கள்.  இதற்கு முழு பொறுப்பு அதிமுக அரசு தான்  என்றார் திருமாவளவன்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT