தமிழ்நாடு

தீவிர மருத்துவக் கண்காணிப்பில் அமைச்சா் துரைக்கண்ணு

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண்துறை அமைச்சா் துரைக்கண்ணு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு உயிா் காக்கும் உயா் மருத்துவ சிகிச்சைகள் தொடா்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைக்கண்ணுவுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின.

அதுமட்டுமல்லாது அவரது நுரையீரலில் 90 சதவீதம் தொற்று ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். இருப்பினும் அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதுமில்லை என்று மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். மருத்துவக் குழுவினா் அவரை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT