ஆம்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் வழங்க வலியுறுத்தி ஆம்பூர் வாருவாய் துறை அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாகப் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சந்திரன் தலைமை வகித்தார்.
தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் சி.ஓம்பிரகாசம், நகரச் செயலாளர் சக்தி ஒன்றிய செயலாளர் சரவணன், நகரத் துணை செயலாளர் அரவிந்தன், ஒன்றிய துணை செயலாளர் தென்னரசன் தொகுதி துணை செயலாளர் இல.சேகர், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், ஆம்பூர் தொகுதி செயலாளர் ம.வெங்கடேசன் மற்றும் 30க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.