சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,828 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 2,516 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 688 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 218 பேரும், ஈரோட்டில் 155 பேரும், செங்கல்பட்டில் 150 பேரும், சேலத்தில் 147 பேரும், திருவள்ளூரில் 138 பேரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..