சென்னை: பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 29-ம் தேதி வியாழக்கிழமையன்று மட்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தொடர் விடுமுறை காரணமாக நாளை (அக்.29) வியாழக்கிழமை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.