தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன.
2019-20 கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள், கரோனா காலத்தில் நடத்தப்பட்ட தேர்வை எழுத முடியாதவர்களுக்கு சமீபத்தில் துணைத்தேர்வு நடத்தப்பட்டது.
இதில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான http://tnresults.nic.in/, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகியவற்றில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு மாணவர்கள் வருகிற நவம்பர் 3, 4 ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) வெளியாகிறது.