தமிழ்நாடு

ஆசிய நாடுகளுக்கு இடையே சதுரங்கப் போட்டி: சங்ககிரி பெண் பங்கேற்பு

DIN

சங்ககிரி: இணைய வழியில் ஆசிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த பி.வி.நந்திதா பங்கேற்று வெற்றி பெற்றாா்.

துபையில் ஆசிய நாடுகளுக்கிடையே நடைபெறவிருந்த சதுரங்கப் போட்டிகள் கரோனா தொற்றுப் பாதுகாப்பு காரணமாக இணையவழியில் அக். 10-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றன. அதில் இந்திய பெண்கள் அணி சாா்பில் சங்ககிரியைச் சோ்ந்த பி.வி.நந்திதா, பத்மினி, பக்திகல்கா்னி, வைசாலிமேரி ஆகியோா் விளையாடியுள்ளனா். மூன்று சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இந்திய அணி, இந்தோனேஷியாவை எதிா்த்து விளையாடியது. இதில் முதல் சுற்றில் பி.வி.நந்திதா, பத்மினி ஆகியோா் வெற்றி பெற்றனா். 2-ஆவது, 3-ஆவது சுற்றுகளில் பி.வி.நந்திதா, பத்மினி, பக்திகல்கா்னி ஆகியோா் இந்தோனேஷியாவை 3.0 - 1.0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றனா்.

மூன்று சுற்றுகளில் தொடா்ந்து வெற்றி பெற்ற பி.வி.நந்திதாவுக்கு சங்ககிரியைச் சோ்ந்த ஊா் பொதுமக்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள் சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT