சேலத்தில் அரசுப் போக்குவரத்து பணிமனையில் தனியார் பயிற்சியாளருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் அரசுப் பேருந்தில் சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சேலம் அஸ்தம்பட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநர்களுக்குப் பயிற்சியளிக்க வந்த தனியார் நிறுவன பயிற்சியாளர் கார்த்தி (35) என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
ஆம்புலன்ஸை எதிர்பார்க்காமல் அரசுப்பேருந்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் பயிற்சியாளர் கார்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.