தமிழ்நாடு

விழுப்புரத்தில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் கைது

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து, பாஜக மகளிரணி சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பாஜக- விசிக இடையே மோதல் ஏற்படும் என்ற அச்சத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் பாஜக நிர்வாகிகளை வீடுகளிலும், வழியிலும் கைது செய்து வருகின்றனர்.

திருக்கோவிலூரிலிருந்து வந்த மாவட்டத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ  கலிவரதன், மாவட்ட பொருளாளர் சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளை காணை காவல்துறை கைது செய்தனர்.

மாவட்டப் பொதுச் செயலாளர் ஜெயக்குமார், விவசாய அணித் தலைவர் அசோக்குமார் உள்ளிட்டோர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT