ஆம்பூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து ஆம்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 15 பேர் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 15க்கும் மேற்பட்ட கட்சியினரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.