திருவடிச்சூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் உற்சவ மூர்த்தி அம்மன் ஸ்ரீ வித்யா தேவி அம்மன் அலங்கார ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாவான நவராத்திரி திருவிழா, ஒன்பது நாள்களும் அனைத்து கோயில்கள் மற்றும் பல்வேறு விழாக் குழுவினரால் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாவாகும்.
இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த திருவடித் சூரத்தில் உள்ள தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தேவிஸ்ரீ கருமாரியம்மன் அம்மன் சொர்ணாம்மிகை அம்மன் உள்ளிட்ட அம்மன்களுக்குள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
உற்சவ அம்மன் ஸ்ரீ வித்யா தேவி அம்மன் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.