நவராத்திரி திருவிழாவையொட்டி செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் எட்டாம் நாள் பூஜை நடைபெற்றது.
ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாவான நவராத்திரி திருவிழா, ஒன்பது நாள்களும் அனைத்து கோயில்கள் மற்றும் பல்வேறு விழாக் குழுவினரால் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாவாகும்.
இந்நிலையில் செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் எட்டாம் நாள் பூஜையை முன்னிட்டு கோயில்களில் சாமிகள் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.